திங்கள், 30 ஜனவரி, 2023

தீண்டாமை உறுதிமொழி.....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.01.2023) அண்ணல் காந்தியின் 76 வது நினைவு நாள், *தீண்டாமை உறுதி மொழி* மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அண்ணல் காந்தியின் தியாக மிக்க பணிகள் பற்றியும், அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்தும், தீண்டாமைக்கு ஒழிக்க பாடுபட்டதையும் விரிவாக விளக்கினார். பின்னர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு.அனிதா ஆகியோரும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக