வெள்ளி, 17 நவம்பர், 2023

மருத்துவ முகாம்......

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (17.11.2023) பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னதாக மருத்துவர் ஜெ. சாய்பிரியா மாணவர்களுக்கு சுகாதாரம் காத்தல், வருமுன் காத்தல், டெங்கு, மலேரியா ஆகியவற்றில் இருந்து காத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு கதுத்துக்களை பகிர்ந்துக்கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் அனைவரையும் தனித்தனியே சோதித்து அவர்களுக்கான மருத்துவ குறிப்புகளையும், தேவையான மருந்து, மாத்திரைகளையும் வழஙகினார். நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன, உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், மா. யோகலட்சுமி, பூ.இராம்குமார், மு. அனிதா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

குழந்தைகள் நாள் விழா 2023....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் நாள் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு மற்றும் குழந்தைகள் நாள் விழாவுக்கு காரணமான ஜவகர்லால் நேருவின் தியாகம், முதல் இந்தியப் பிரதமராக அவர் ஆற்றிய சாதனைகள் ஆகியவற்றையும், குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் நேரு குறித்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினர், அவரைப் பற்றிய கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றையும் வழங்கினர். அதை தொடர்ந்து ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை, பாடல் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது. இறுதியாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.