வெள்ளி, 26 ஜனவரி, 2024

குடியரசுத் திருநாள் விழா - 2024

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2024) இந்தியத் திருநாட்டின் 75வது குடியரசுத் திருநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இந்திய. பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் வெ. சண்முகம், மா. யோகலட்சுமி, ச. அனிதா மற்றும் முன்னாள் மாணவர்கள் வாழ்த்துரை வழங்கினர். அதை தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு பற்றியும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது பற்றியும், குடியரசு நாளின் முக்கியத்துவம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். மாணவர்கள் தமிழ் ஆங்கில பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர். விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இனிப்பு, சத்து பாணம் ஆகியன முன்னாள் மாணவர்களின் உதவியோடு வழங்கப்பட்டது.