செவ்வாய், 5 செப்டம்பர், 2023

ஆசிரியர் தினவிழா - 2023

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2023) ஆசிரியர் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வெ. சண்முகம், அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, ச. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதை தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு பற்றியும், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். பின்னர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளித் தலைமை ஆசிரியரால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி தமது அன்பை வெளிப்படுத்தினர். இறுதியில் உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், கலந்துக்கொண்டனர்