புதன், 24 ஆகஸ்ட், 2022

நூல் வெளியீட்டு விழா....

 


ஊத்தங்கரை கவி செங்குட்டுவன் எழுதிய ”ஐம்பெரும் காப்பியங்கள் வினா- விடை விளக்கம்” எனும் நூல் வெளியீட்டுவிழா ஊத்தங்கரை யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நூலை திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான அறிவுமதி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முதல் பிரதியை கல்லூரி தாளாளர் அருள் அவர்கள் பெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணகுமாரி , கவிஞர் இளம்பருதி, சமூக செயற்பாட்டாளர் சத்யமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் நூலாசிரியர் கவி. செங்குட்டுவன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.









திங்கள், 15 ஆகஸ்ட், 2022

75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா....

 


          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2022) நடைபெற்ற ”75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா” பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

          முன்னதாக  பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா குறித்து உரையாடினார். பின்னர் மாணவர்கள் 75வது சுதந்திர நாளை குறிப்பிடும் வகையில் கையில் மூவர்ண கொடியை ஏந்திக்கொண்டு இந்தியா வரைபடம் போல நின்றனர். அதன் மத்தியில் மாணவர்களாலேயே 75 என்ற எண்ணும் காட்டப்பட்டது. இந்நிகழ்வு அனைத்து பெற்றோர்களையும் மாணவர்களையும் மிகவும் கவர்ந்தது.
 
        பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில், 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா குறித்து விரிவாகப் பேசி, நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலத்தி நன்றி தெரிவிக்கவே இது போன்ற விழாக்கள் எனக்கூறி முடித்தார், தொடர்ந்து பேசிய அவர் கொரோணா காலகட்டத்திற்கு பின்னர் பள்ளி திரும்பியுள்ள  மாணவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதை மடை மாற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

      பின்னர் மாணவர்கள் சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை ஓவியம் பாடல், கவிதை போன்ற பலவகைகளில் தமது திறன்களை வெளிப்படுத்துனர். அதைத் தொடர்ந்து மாண்வர்கள் பலவண்ண ஆடை உடுத்தி தேசபக்தி மற்றும் நாட்டுபுறப் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

             அதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்


     நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி உள்ளிட்ட பெற்றோர்கள், கோகிலா உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.