வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட துவக்கவிழா....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (25.08.2023) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் தி.வெங்கடேசன், சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, உதவி ஆசிரியர்கள் வெ.சண்முகம், பூ.இராம்குமார், மா.யோகலட்சுமி மற்றும் புதுவாழ்வுத் திட்ட பொருப்பாளர்கள் மாயலட்சுமி, மைய அமைப்பாளர்கள் காந்தா, சங்கீதா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு.....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறமையை வெளிப்படுத்தும் பொருட்டு *சந்திராயன் 3* விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி சந்திரனில் தரை இறக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பொருட்டு வாழ்த்து கோஷங்களோடு, பல வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர். நிகழ்வில் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், பூ. இராம்குமார், மு. அனிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

இந்திய சுதந்திரத் திருநாள் விழா - 2023

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2023) இந்தியத் திருநாட்டின் 77வது சுதந்திரப் பெருநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில் மூவர்ண தேசியக் கொடியை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும், கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்ற உறுப்பினருமான திருமதி விஜயகுமாரி பிரகாஷ் ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் வெ. சண்முகம், மா. யோகலட்சுமி, ச. அனிதா மற்றும் முன்னாள் மாணவர்கள் வாழ்த்துரை வழங்கினர். அதை தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு பற்றியும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.