புதன், 25 அக்டோபர், 2023

பள்ளியில் விஜயதசமி விழா....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டு மங்களப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள், பள்ளிப் பதிவேடுகள், தளவாடச் சாமான்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் பொறி,கடலை ஆகியன வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோரும், மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
.