வியாழன், 24 ஆகஸ்ட், 2023

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு.....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறமையை வெளிப்படுத்தும் பொருட்டு *சந்திராயன் 3* விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி சந்திரனில் தரை இறக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பொருட்டு வாழ்த்து கோஷங்களோடு, பல வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர். நிகழ்வில் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், பூ. இராம்குமார், மு. அனிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக