வியாழன், 26 ஜனவரி, 2023

இந்திய குடியரசுநாள் விழா 2023...

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2023) இந்திய குடியரசுநாள் விழா நடைபெற்றது.. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளி உதவி ஆசிரியர் மா. யோகலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் குடியரசுநாள் பற்றியும், சுதந்திர நாளுக்கும் குடியரசு நாளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றியும், இவ்விழாக்களை தேசிய விழாவாக கொண்டாடப்படும் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக