வெள்ளி, 13 ஜனவரி, 2023

பொங்கல்விழா.....


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று 13.01.2023 பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் அனைவரும் பலவண்ண புத்தாடைகளை அணிந்து வந்து மகிழ்வை வெளிப்படுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பள்ளியில்  பொங்கல் வைக்கப்பட்டு  மதிய உணவாக அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வாழை இலையில் பரிமாறப்பட்டது. பின்னர் அனைத்து மாணவர்களும் செங்கரும்பு உண்ணும் நிகழ்வு வெகு நேர்த்தியாக நடைபெற்றது. 
நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, சிறப்பு ஆசிரியர் வெ. காமாட்சி, கெகபிராம்பட்டி உதவி ஆசிரியர் வீரபத்திரன், சத்துணவு அமைப்பாளர் பீமன், உதவியாளர் சௌந்தரியா ஆகியோரும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.






































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக