வெள்ளி, 16 செப்டம்பர், 2022

சர்வதேச ஓசோன் நாள்...

  


           ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (16.09.2022) சர்வதேச ஓசோன் நாள் விழா நடைபெற்றது..

       முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளி உதவி ஆசிரியர் வெ. சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சர்வதேச ஓசோன் நாள் பற்றியும், அதன் விளைவுகள் தடுக்கும் முறைகள் பற்றியும் விரிவான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார்.

         இன்றைய ஓவியப் போடியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

                                             
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 






























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக