திங்கள், 5 செப்டம்பர், 2022

ஆசிரியர் நாள் விழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா...



           ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2022)
  ஆசிரியர் தினவிழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா நடைபெற்றது.

     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி அனைவரையும் வரவேற்றார்.

     தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் நாளின் முக்கியத்துவம் பற்றியும், இதற்குக் காரணமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து இதே நாளில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஒப்பற்ற தியாகியுமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றியும், அவர் சிறையில் செக்கிழுத்து துண்பப்பட்டதையும், தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று கப்பல் வாங்கி, வெள்ளை அரசுக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

     பின்னர் தான் தலைமை ஆசிரியராகப் பொருப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து தனக்கு உதவியாக இருக்கும் ஆசிரியர்களை சிறப்பித்து மகிழும் நிகழ்வை நினைவு கூர்ந்து, உதவி ஆசிரியர்கள் இருவருக்கும் ஆசிரியர் நாள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் இந்நாளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை எடுத்துக் கூறி அனைவருக்கும் நன்ரி கூறினார்.

       பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக