வியாழன், 8 செப்டம்பர், 2022

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான - பயிற்சி முகாம்...


      ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 08.09.2022 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது. 

        முகாமில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று இப்பயிற்சி முகாமின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் பெற்றோர்களின் பங்கு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

       தொடர்ந்து ஒன்றிய வளமைய ஆசிரியர் பயிற்றுனர் திரு. வே. சண்முகம் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து அனைவருக்கும் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்தும், பள்ளி வளர்ச்சிக்கான செயல்திட்டம் தயாரிப்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அத்தோடு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் விவரித்தார். 

       நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி ஜே. நாச்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு தேவராஜ், கல்வியாளர் திரு சதீஸ்குமார், உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், பூ. இராம்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

         இறுதியில் பள்ளியின் உதவி ஆசிரியர் மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக