வியாழன், 15 செப்டம்பர், 2022

பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்..... தமிழ் நுண் பயிலரங்கம்

 


           இன்று (15.09.2022) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்ணாவின் பேச்சாற்றல் எனும் தலைப்பில் தமிழ் நுண் பயிலரங்கம் நடைபெற்றது. 

        இப்பயிலரங்கில் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அரசியல் வாழ்வு பற்றி எடுத்துக் கூறிய அதே வேளையில் அவரின் சிறப்புக்கு மிகவும் காரணமாக அமைந்த பேச்சாற்றல் பற்றி விரிவாகவும் பல்வேறு மேடைப் பேச்சுகள் மேற்கோள் காட்டப்பட்டும் எடுத்துரைக்கப்பட்டது. 

    இப்பயிலரங்கை ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் தலைவரும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான  கவி.செங்குட்டுவன் (எ) செ. இராஜேந்திரன் அவர்கள் நடத்தினார். இதில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 17 பேர் பங்கேற்றனர். 

        இந்நிகழ்வில் அவர்கள் பங்கேற்றதன் மூலம் இன்று அனைவராலும்  பிறந்த நாள் கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.ந. அண்ணாதுரை அவர்களைப் பற்றியும் அவரின் தனித்த பேச்சாற்றல் பற்றியும் தெளிவாக அறிந்துக் கொண்டனர்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக