திங்கள், 15 ஆகஸ்ட், 2022

75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா....

 


          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2022) நடைபெற்ற ”75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா” பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

          முன்னதாக  பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா குறித்து உரையாடினார். பின்னர் மாணவர்கள் 75வது சுதந்திர நாளை குறிப்பிடும் வகையில் கையில் மூவர்ண கொடியை ஏந்திக்கொண்டு இந்தியா வரைபடம் போல நின்றனர். அதன் மத்தியில் மாணவர்களாலேயே 75 என்ற எண்ணும் காட்டப்பட்டது. இந்நிகழ்வு அனைத்து பெற்றோர்களையும் மாணவர்களையும் மிகவும் கவர்ந்தது.
 
        பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில், 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா குறித்து விரிவாகப் பேசி, நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலத்தி நன்றி தெரிவிக்கவே இது போன்ற விழாக்கள் எனக்கூறி முடித்தார், தொடர்ந்து பேசிய அவர் கொரோணா காலகட்டத்திற்கு பின்னர் பள்ளி திரும்பியுள்ள  மாணவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதை மடை மாற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

      பின்னர் மாணவர்கள் சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை ஓவியம் பாடல், கவிதை போன்ற பலவகைகளில் தமது திறன்களை வெளிப்படுத்துனர். அதைத் தொடர்ந்து மாண்வர்கள் பலவண்ண ஆடை உடுத்தி தேசபக்தி மற்றும் நாட்டுபுறப் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

             அதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்


     நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி உள்ளிட்ட பெற்றோர்கள், கோகிலா உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

































































வெள்ளி, 15 ஜூலை, 2022

கல்வி வளர்ச்சி நாள் விழா...


                    
      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.07.2022) கர்மவீரர் கு. காமராஜ் அவர்களின் 120வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழா, சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, சாய் அண்ணபூர்ணா அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கான  தினசரி சிற்றுணவு வழங்கும் நிகழ்வின் துவக்கவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

   பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

     தொடர்ந்து பள்ளி மாணவர்கள் காமராசர் பற்றியும் அவரின் அரிய பணிகள் பற்றியும் தமிழ் பேச்சு, ஆங்கில பேச்சு, கவிதை ஆகிய வடிவங்களில் வழங்கினர்.

பின்னர் விழாவுக்கு தலைமையேற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் இன்றைய சிறப்பு நாளான கல்வி வளர்ச்சி நாள் பற்றியும், கர்ம வீரர் காமராஜரின் கல்விப் பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட சத்யசாய் அண்ணபூர்ணா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சியில் உணவின் பங்கு பற்றி எடுத்துக் கூறி,  அதற்காகத்தான் பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற சிற்றுணவு வழங்கப்படுகிறது என்றார்.

பின்னர் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இன்றைய நிகழ்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்ப்ட்டு ஆனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இறுதியில் உதவி ஆசிரியர் திரு ச. மஞ்சுநாதன், அனைவருக்கும் நன்றி கூறினார்...





























வியாழன், 14 ஜூலை, 2022

மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் துவக்கி வைத்த சதுரங்கப் போட்டி...


  ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.07.2022)  பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு சே. சதீஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் ஊத்தங்கரை வட்டாட்சியர் திரு சி. கோவிந்தராஜ் அவர்கள், கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

   முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சதுரங்கப் போட்டி தொடர்பான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார்.

     இன்றைய போட்டியில் 6 – 8 வகுப்பு ஆண்கள் பிரிவில் க. நவீன்குமார், ஜெ. சஞ்சய் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ச. ஆராதனா, இர. சரண்யா ஆகியோரும்  ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

    1 – 5 வகுப்பு ஆண்கள் பிரிவில் ம. குரு, ச. சித்தார்த் ஆகியோரும், பெண்கள் பிரிவில் சு. தமிழரசி, கோ. அகிலா ஆகியோரும் தேர்வு பெற்றனர்

                                             
    போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், 
பூ. இராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்...