சனி, 12 அக்டோபர், 2019

வண்ண மீன்கள்.....



             இன்று சனிக்கிழமை பள்ளி வேலைநாள், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று வண்ண ஆடைகளுக்கு அனுமதி.......

            பலவண்ண ஆடைகளில் பகட்டாக காட்சி அளிக்கும் எமது பள்ளி (ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி) மாணவர்கள்........









 

புதன், 9 அக்டோபர், 2019

விஜயதசமி விழா ........

                                      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம்.சிவகுமார், மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.





















சனி, 5 அக்டோபர், 2019

மாணவர்களுக்கு பாராட்டு.......






கிருஷ்ணகிரியில் நான்கு நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர் செஞ்சிலுவைச் சங்க  முகாமில் ஊத்தங்கரை ஒன்றிய அனைத்து நடுநிலைப் பள்ளிகள் சார்பில் கலந்துக் கொண்ட ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வே. தினேஷ், மு. பேரரசு ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.