வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம் - 2020....

          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2020) தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

                முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் தமது தலைமை உரையில் இன்றைய நாளின் சிறப்பு பற்றியும், அதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றியும் விளக்கினார். 

          மாணவர்கள் தாம் படைத்த அறிவியல் செயல்திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். இறுதியாக பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம்.சிவக்குமார் அனைவரும் நன்றி கூறினார். நிகழ்வில் தற்காலிக ஆசிரியர்கள் சுஜி, கஜேந்திரி, நித்தியா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக