திங்கள், 24 பிப்ரவரி, 2020

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் 2020.......

           
            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (24.02.2020) *மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்* கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் *பெண் குழந்தைகள் பாதுகாப்பு* தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களது தன்னம்பிக்கை தொடர்பாகவும் விரிவாக விளக்கியுள்ளார். விழாவில் மாவட்ட பால்வள நிறுவன இயக்குநர் திரு நா. மகிழன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மண்ணாண்ன்டியூர் சாமிநாதன் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடக்குறிப்பேடுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார், தற்காலிக ஆசிரியர்கள் க. கஜேந்திரி, மு. சுஜி, க. நித்தியா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்...,



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக