திங்கள், 11 நவம்பர், 2019

கல்வி எழுச்சி நாள்……….


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (11.11.2019) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது சிறப்புரையில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கல்விப் பணி, அவர் கொண்டு வந்த கட்டாய கல்விச் சட்டம், அவர் முயற்சியில் துவக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பள்ளி மாணாவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரின் பத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்து.
இறுதியில் உதவி ஆசிரியர்  திரு வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.









3 கருத்துகள்: