சனி, 16 நவம்பர், 2019

விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா…..


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லா வண்ண புத்தகப் பைகள் மற்றும் வண்ண எழுதுகோள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர் வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
வண்ண புத்தகப் பைகளைப் பெற்றுக் கொண்ட எமது பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்வோடு பள்ளி வளாகத்தில் நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக