புதன், 31 ஜூலை, 2019

பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள்


இன்று 31.07.2019 ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்த லைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று பள்ளியில் நடத்தப்படும் சதுரங்கப்போட்டிகள் பற்றி எடுத்துக்கூறி மாணவர்கள் சதுரங்கம் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், இதனால் மாணவர்களின் சிந்தனைத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவை வளரும் என்பது பற்றியும் கூறி அனைவரும் அவசியம் இவ்விளையாட்டில் ஈடுபடவேண்டும் எனவும் எடுத்துக் கூறினார்.
அடுத்து 3,4,5 வகுப்பு மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித் தனி அணிகளாகவும், 6,7,8 வகுப்பு மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித் தனி அணிகளாகவும், போட்டியில் ஈடுபட்டனர். மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற போட்டியில் இறுதியில் இரண்டு ஆண்கள் அணியும், இரண்டு பெண்கள் அணியும் தேர்வு செய்யப்பட்டது. அதில் 3,4,5 வகுப்பு ஆண்கள் பிரிவில் செ. லோகேஷ், ஜெ. சஞ்சய் ஆகியோரும், பெண்கள் பிரிவில ச. ஆராதனா, க. ரேஷ்மா ஆகியோரும், 6,7,8 வகுப்பு ஆண்கள் பிரிவில் வே. தினேஷ், செ. பெருமாள்  ஆகியோரும், பெண்கள் பிரிவில் ச. இதம், கு. காவியா ஆகியோரும் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம். சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக