திங்கள், 1 ஜூலை, 2019

ஒளிரும் ஆசிரியர் விருது………..




தமிழ்நாடு டிஜிடல் டீம் மற்றும் ஆசிரியர்.காம் இணைந்து ஆர்.எம்.என் மகால், சிங்கபெருமாள் கோயில், சென்னையில் நடத்திய விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், சிறந்த தகவல் தொழிற்நுட்பக் கல்வி, கணினிப் பயன்பாடு மற்றும் சமூக சேவை அளித்து மாணவர்ளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய ”ஒளிரும் ஆசிரியர்” எனும் சிறப்பு விருது தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர் திரு கே. குணசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவ்விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு டிஜிடல் டீம் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. இரமேஷ், ஆசிரியர்.நெட் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ச. சரவணன், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர். இர. ஆசிர்ஜூலியஸ், புதிய தலைமுறைக் கல்வி இதழின் உதவி ஆசிரியர் திரு மோ. கணேசன். கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு சிகரம் சதீஷ்குமார், தகவல் தொழிற் நுட்பக் கல்வி தேசிய விருதாளர்கள் திரு ஸ்ரீ. திலீப்குமார், திரு எஸ். சைமன் பீட்டர்பால், திரு பி. கருணைதாஸ், திரு ஜி. சங்கர் ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.

   

















 





                                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக