புதன், 5 செப்டம்பர், 2018

ஆசிரியர் தினவிழா - 2018



ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2018) ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் முன்னால் இந்திய குடியரசுத் தலைவர் திரு சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப் படுவது குறித்தும்,  ஆசிரியர் தினவிழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் வருங்காலத் தூண்கள் ஆசிரியர்களாலேயே உருவாக்கப்படுகிறது என்பது குறித்தும் கூறி, ஆசிரியர்களின் தியாகப் பணிகளை போற்றி பாராட்டியதோடு. அவர்களை இச்சமூகம் போற்றி பாராட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்
தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின்  பணிகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கினார்..
பின்னர் மாணவர்கள் தமது வகுப்பு ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் கற்பித்தல் பற்றியும் கூறி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டதோடு, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.









































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக