வியாழன், 20 செப்டம்பர், 2018

பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ......


ஊத்தங்கரைஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 20.09.2018 ல் டெங்கு விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் தொடர்பான பல்வேறு செய்திகளையும், இம்முகாமின் அவசியம் குறித்தும் விரிவாகக் கூறி, மாணவர்கள் வருமுன் காப்போம் எனும் கருத்துக்கு ஏற்ப நோய்கள் தம்மை அனுகும் முன் நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்துக் கொள்ளலாம் எனவும், அதற்காக நாம் நமது பள்ளி, வீடு, சுற்றுபுறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்துக் கொண்ட காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் திரு சி. துரைராஜ் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களையும், டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.   
முன்னதாக பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார உறுதி மொழியை ஏற்றனர்.
தொடர்ந்து அனைவருக்கும் நிலவேம்பு வடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் உதவி ஆசிரியர், திருமதி த. லதா, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா, அனைவருக்கும் நன்றி கூறினார்.


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக