சனி, 5 அக்டோபர், 2019

ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழா……



இன்று (03.10.2019) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்ணல் காந்தியின் 150வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் மகாத்மா காந்தியின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் படி கிராமத்தில் பல்வேறு தெருக்களில் ஊர்வலமாகச் சென்று  நெகிழி குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் சேர்த்தனர்
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களின் திறமையை பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல், போன்றவை மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவில் உதவி ஆசிரியர் திரு வே. இராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களயும், அவரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி மாணவர்கள் மகாத்மா காந்தியின் வாழ்க்கையையே பாடமாக கற்று தமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இறுதியில் பள்ளியின் பகுதி உதவி ஆசிரியர் திரு ஜி.எம். சிவக்குமார்  அனைவருக்கும் நன்றி கூறினார்.





















வியாழன், 3 அக்டோபர், 2019

இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா…..




கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை ஒன்றியம்  ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள்  வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் ஆகியோர்  விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.


















செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஊத்தங்கரை பலவகை தொழிற்நுட்பக் கல்லூரியில் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா.......


காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழா……

இன்று (01.10.2019) ஊத்தங்கரை அரசு பலவகை தொழிற்நுட்பக் கல்லூரியில் அண்ணல் காந்தியின் 150வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் மகாத்மா காந்தியின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கல்லூரியின் முதல்வர் திருமதி எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி விரிவுரையாளர் திரு ஏ. செல்வராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களின் திறமையை பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல், ஓவியம், ஓரங்க நாடகம், தனியாள் வேடம், நழுவக் காட்சி (slide show) மற்றும் மாதிரிகள் செய்தல் போன்றவை மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவில் தலைமை விருந்தினர்களாக ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி பரிமளா ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக அத்திப்பாடி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு முருகன், ஊத்தங்கரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு கு. கணேசன் ஆகியோரும் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமது சிறப்புரைகளின் மூலம் தெரிவித்தனர்.

இறுதியில் கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளர் திருமதி தீபிகா அனைவருக்கும் நன்றி கூறினார்.