திங்கள், 1 ஜூலை, 2019

மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு.......





            
             தமிழ்நாடு டிஜிடல் டீம் மற்றும் ஆசிரியர்.காம் இணைந்து ஆர்.எம்.என் மகால், சிங்கபெருமாள் கோயில், சென்னையில் நடத்திய விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. 

              தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், சிறந்த தகவல் தொழிற்நுட்பக் கல்வி, கணினிப் பயன்பாடு மற்றும் சமூக சேவை அளித்து மாணவர்ளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய ”ஒளிரும் ஆசிரியர்” எனும் சிறப்பு விருது தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர் திரு கே. குணசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது. 

              இவ்விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய என்னையும், அவர்கள் தேர்வு விருது வழங்கினர். விருது வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், இவ்விருது பெற காரணிகளாக அமைந்த எமது பள்ளி மாணவர்களுக்கு நன்றியை கூறிடும் முகத்தான், எனக்கு வழங்கப்பட்ட ” ஒளிரும் ஆசிரியர்” விருதை எமது பள்ளி மாணவர்களுக்கு இன்று அர்ப்பணித்து மகிழ்ந்தேன். அதன் வெளிப்பாடாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எழுதுகோள்கள்(பேனா) மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தேன்.
















ஒளிரும் ஆசிரியர் விருது………..




தமிழ்நாடு டிஜிடல் டீம் மற்றும் ஆசிரியர்.காம் இணைந்து ஆர்.எம்.என் மகால், சிங்கபெருமாள் கோயில், சென்னையில் நடத்திய விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், சிறந்த தகவல் தொழிற்நுட்பக் கல்வி, கணினிப் பயன்பாடு மற்றும் சமூக சேவை அளித்து மாணவர்ளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய ”ஒளிரும் ஆசிரியர்” எனும் சிறப்பு விருது தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர் திரு கே. குணசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவ்விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு டிஜிடல் டீம் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. இரமேஷ், ஆசிரியர்.நெட் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ச. சரவணன், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர். இர. ஆசிர்ஜூலியஸ், புதிய தலைமுறைக் கல்வி இதழின் உதவி ஆசிரியர் திரு மோ. கணேசன். கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு சிகரம் சதீஷ்குமார், தகவல் தொழிற் நுட்பக் கல்வி தேசிய விருதாளர்கள் திரு ஸ்ரீ. திலீப்குமார், திரு எஸ். சைமன் பீட்டர்பால், திரு பி. கருணைதாஸ், திரு ஜி. சங்கர் ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.

   

















 





                                                                     

சனி, 22 ஜூன், 2019

சர்வதேச யோகா தினவிழா – 2019




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று  (21.06.2019) சர்வதேச யோகா தினவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளித்  தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்  அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் யோகா தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக கூறியதோடு, பாரதத்தின் பழம்பெரும் கலையான யோகக் கலையை அனைவரும் கற்று தமது உடல் மற்ற்ம் உள்ள ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின்   வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,

நிகழ்வில் மனவளக் கலை துணை பேராசிரியர் திருமதி சரஸ்வதி, திருப்பத்தூர் ஜேசீஸ் சங்கத் தலைவர் திரு இராம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டனர்.
மனவளக்கலை துணைப் பேராசிரியர் மாணவர்களுக்கு பாரம்பர்ய உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான உடற்பயிற்சி மற்றும் யோகா தொடர்பாக கருத்துரைகளை வழங்கி பயிற்சி வழங்கினார்..