சனி, 22 செப்டம்பர், 2018

கவிதை நூல் வெளியீட்டு விழா




இன்று 21.09.2018 வெள்ளிக்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் . அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக சி.வீரமணி அனைவரையும் வரவேற்றார்.
,
விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தணிகை. ஜி. கருணாநிதி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் . மாதப்பன், மருத்துவர் வெ. தேவராசு ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரை வழங்கினர்.

நூலின் முதல் பிரதியை முத்தமிழ் இலக்கியப் பேரவை தலைவரும், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான கல்வியாளர் திருமிகு வே .சந்திரசேகரன் அவர்கள் வெளியிட்டார்,

நூலின் முதல் பிரதியை மத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர்: திருமிகு இல. நடராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில்  பங்கேற்ற தமிழார்வலர்கள், கல்வியாளர்கள், வணிகப் பெருமக்கள், பல்வேறு அரசியல் இயக்கத்தினர் நூலினை பெற்றுக்கொண்டார்கள்.

விழாவில் கவிஞர் முத்து.செல்வராசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்  செ. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் செ. ஆனந்தன் அவர்களின் பிக்பாஸ் வீடா இந்தியா நூலினை சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. சி. சிவராமன் அவர்கள் அறிமுகப்படுத்தி கருத்துரை வழங்கினார்.

கவி.செங்குட்டுவன் அவர்களின் பட்டினித் தடாகத்துப் பாச மலர்கள் நூலினை நற்றமிழ் அருவி நாமக்கல் நாதன் அவர்கள் அறிமுகப்படுத்தி கருத்துரை வழங்கினார்.

பின்னர் கவிஞர் .செ.ஆனந்தன், கவி.செங்குட்டுவன் () செ .இராசேந்திரன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

நிகழ்வுகளை பழ.பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்.

இறுதியில் ஆடிட்டர் .இராசேந்திரன் அவர்கள் நன்றியுரை அனைவருக்கும் வழங்கினார்.






























































வியாழன், 20 செப்டம்பர், 2018

பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ......


ஊத்தங்கரைஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 20.09.2018 ல் டெங்கு விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் தொடர்பான பல்வேறு செய்திகளையும், இம்முகாமின் அவசியம் குறித்தும் விரிவாகக் கூறி, மாணவர்கள் வருமுன் காப்போம் எனும் கருத்துக்கு ஏற்ப நோய்கள் தம்மை அனுகும் முன் நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்துக் கொள்ளலாம் எனவும், அதற்காக நாம் நமது பள்ளி, வீடு, சுற்றுபுறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்துக் கொண்ட காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் திரு சி. துரைராஜ் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களையும், டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.   
முன்னதாக பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார உறுதி மொழியை ஏற்றனர்.
தொடர்ந்து அனைவருக்கும் நிலவேம்பு வடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் உதவி ஆசிரியர், திருமதி த. லதா, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா, அனைவருக்கும் நன்றி கூறினார்.