வியாழன், 24 ஜூலை, 2014

சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ: www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல்: pumsjothinager@gmail.com
===============================
சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்
இன்று 23.07.2014 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
     முன்னதாக சத்ரங்கப் போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்க விளையாட்டுகளில் பங்குபெறுவதால் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும் எனவும், படிப்பில் முழுமையாக ஈடுபட இது உதவும் எனக் கூறினார்.
 பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள்  திருமதி மு. இலட்சுமி, திரு. இரா. முரளி, திரு தீ. சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.














செவ்வாய், 15 ஜூலை, 2014

கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் விழா



கல்வி வளர்ச்சி நாள் விழா
இன்று  15..07.2014.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
                முன்னதாக பட்டதாரி உதவி ஆசிரியை திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  விழாவிற்கு தலைமை தாங்கினார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் இலக்கிய பேச்சு, மற்றும் கவிதை, பாடல்கள் மூலம் காமராசர் பெருமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி ஆசிரியர்கள் திரு தீ சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேலு, திருமதி அ. நர்மதா ஆகியோர் காமராசர் குறித்து பல தலைப்புகளில் பேசினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில்  காமராசரின் வாழ்க்கை ஓர் திறந்த புத்தகம் எனத் துவங்கி அவர் தமிழக கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அளவில்லா பணிகள் மற்றும் தமிழகத்தில் தொழில்துறை, விவசாயத்துறை உள்ளிட்டவை பெரும் வளர்ச்சி பெறுவதற்கு ஆற்றிய தொண்டு, அவரின் அரசியல் வாழ்க்கை, சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு என எல்லாச் சிறப்புகளையும் பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.
பின்னர் தமிழில் உரையாற்றிய ஏழாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ், ஆங்கிலத்தில் உரையாற்றிய ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன், கவிதை வாசித்த ஏழாம் வகுப்பு மாணவி கு. ஜீவா, பாடல்கள் பாடிய ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆ. கீர்த்தனா, வே. சர்மிளா, நான்காம் வகுப்பு மாணவிகள் ச. இனியா, சி. கோபிகா, திருக்குறளை பொருளுரையுடன் கூறிய நான்காம் வகுப்பு மாணவி ச. இனியா ஆகியோருக்கும் ஆங்கிலத்தில் 50க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், விலங்குகள், ஆகியவற்றின் பெயர்களைக் கூறிய முதல் வகுப்பு மாணவர்கள் மு. பேரரசு, க. பாலமுருகன், உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூறிய செ. திவ்யா, கு. காவ்யா, பாடல்கள் பாடிய ம. சுபா, பெ. கீர்த்திகா  ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பட்டதாரி உதவி ஆசிரியர் திரு. ச. முரளி அனைவருக்கும் நன்றி கூறினார்.




































வியாழன், 10 ஜூலை, 2014

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்




பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
இன்று 10.07.201 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
     முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தமது உரையில் ,தற்போதைய பள்ளியின் வளர்ச்சி நிலைகள் மற்றும் கல்வித் தரத்தில்  மாணவர்களின் முன்னேற்றம், பள்ளியில் செயல்படுத்தி வரும் பாடம்சாரா கூடுதல் செயல்பாடுகளான பள்ளிச் சுற்றுச் சூழல் மன்றம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம், கணிதம், அறிவியல் மன்றச் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார் மேலும் பள்ளியில் அளித்துவரும் மாணவர்களுக்கான கணினிப் பயிற்சியும், கணினி மற்றும் பெருந்திரைக் காட்சி மூலம் கற்பித்தலும்
இதனை அனைத்து பெற்றோர்களும் ஏற்று ஒப்புதல் அளித்தது மிகுந்த மன நிறைவை அளித்தது. ..
பின்னர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்               :     திருமதி சி. இராஜேஸ்வரி
து. தலைவர்           :     திரு மு. அம்பிகா
செயலாளர்            :     திரு செ. இராஜேந்திரன் (தலைமைஆசிரியர்)
து. செயலாளர்        :     திருமதி மு. இலட்சுமி (உதவி ஆசிரியர்)
பொருளாளர்          :     திரு கு. வேலுமணி
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கணகராணி, இரா. சத்யா, கீதா, பூ. பரமேஷ்வரி, உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார். 
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு இரா. முரளி, திரு. தீ. சிவராமன், திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.