வியாழன், 24 ஜூலை, 2014

சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ: www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல்: pumsjothinager@gmail.com
===============================
சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்
இன்று 23.07.2014 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
     முன்னதாக சத்ரங்கப் போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்க விளையாட்டுகளில் பங்குபெறுவதால் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும் எனவும், படிப்பில் முழுமையாக ஈடுபட இது உதவும் எனக் கூறினார்.
 பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள்  திருமதி மு. இலட்சுமி, திரு. இரா. முரளி, திரு தீ. சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக