வெள்ளி, 14 ஜனவரி, 2011

பள்ளியில் பொங்கல் விழா.

               இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். பொங்கல் பாணை பொங்கி வழிந்ததைக் கண்ட மாணவர்கள் “பொங்கலோ பொங்கல்” என மிகுந்த உற்சாகத்தோடு கூக்குரலிட்டது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கிராமத்து பொங்கல் எவ்வாரு நடைபெறுமோ அதே உற்சாகத்தோடு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மாணவர்களுக்கு உரியடித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது. இதைக் கண்ணுற்ற கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைகர் ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் தலைமையில் உதவி ஆசிரியர்கள் திரு பி. பாண்டுரங்கன், திருமதி சி. தாமரைச்செல்வி, திரு சே.லீலாகிருஷ்ணன், திரு ந.இராஜசூரியன் ஆகியோர் செய்தனர்.









வியாழன், 9 டிசம்பர், 2010

எமது பள்ளி........,









ஒன்றிய அளவில் சிறப்பிடம்

ஒன்றிய அளவில் சிறப்பிடம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் எமது பள்ளி மாணவர்கள் எட்டு முதல் பரிசுகளும், ஆறு இரண்டாம் பரிசுகளும், ஐந்து மூன்றாம் பரிசுகளும் ஆக மொத்தம் 19, பரிசுகளைப்  பெற்று ஒன்றிய அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன், ஆசிரியர்கள் பி.பாண்டுரங்கன், சே.லீலாகிருஷ்ணன், ந.இராஜசூரியன், சி. தாமரைசெல்வி ஆகியோரும் பள்ளிக் கல்விக் குழுத் தலைவர் இராதா நாகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி. திருவேங்கடம் ஆகியோரும் பாராட்டினர்


செவ்வாய், 16 நவம்பர், 2010

எமது பள்ளி முப்பெரும் விழா



               
                                              முப்பெரும் விழா
             எமது பள்ளியில் ”அறிவியல் கண்காட்சி துவக்க விழா, பள்ளி மாணவர் மலர் வெளியீட்டு விழா, குழந்தைகள் தின விழா” உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
    விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இரா. மனோகரி பள்ளி அறிவியல் கண்காட்சியத் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர் மலர் “மழலை முத்துக்கள்” இதழை ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் அ.யுவராஜ் வெளியிட ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே.எம்.சீனிவாசன், பெற்றொர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி.திருவேங்கடம், கட்டிடக் குழுத் தலைவர் கி.மோகன். கே.எம்.எத்திராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி ஆசிரியர் பி.பாண்டுரங்கன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் தாமரைச்செல்வி, லீலாகிருஷ்ணன், இராஜ சூரியன் ஆகியோர் செய்தனர்.

அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடல்.........


விழாவில் பள்ளித் தலைமையாசிரியரின் வரவேற்புரை..........
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரின் வாழ்த்துரை...............

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்குதல்.................

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்குதல்.................
பள்ளி மாணவர் மலர் “மழலை முத்துக்கள்” வெளியீடு..............



 மாணவர்களுக்கு பரிசளிப்பு....................

 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிறப்புரை.............

 விழாவில் கலந்துக் கொண்டோருக்கு நன்றியுரை........
 பள்ளியின் மூலிகைத் தோட்டத்தை பார்வையிடும் சிறப்பு அழைப்பாளர்கள்......

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அண்ணா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள்



பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்குபெற்று அதிக எண்ணிக்கையிலான பரிசுகளைப் பெற்றனர்.                    
             சதுரங்கப் போட்டியில் ஜூனியர் ஆண்கள், சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள், சப் ஜூனியர் பெண்கள் ஆகிய   அனைத்து பிரிவுகளிலும் எமது பள்ளி மாணவர்களே முதலிடம் பெற்று பரிசுகளை வென்றுள்ளனர். மேலும் ஜூனியர் மகளிர் வளைப் பந்து போட்டியில் முதலிடமும்,  ஜூனியர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், சப் ஜூனியர் பெண்கல் கேரம் போட்டியில் முதலிடமும், ஜூனியர் ஆண்கள் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.