சனி, 26 மார்ச், 2022

தேசிய கல்மரப் பூங்கா

 


      மிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை எனும் கிராமத்திற்கு. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வருகிறார்கள். அந்த மக்களுக்கு தெரிந்ததெல்லாம் இங்குள்ள ஸ்ரீ வக்ர காளியம்மன் திருக்கோயில்தான்..

ஆனால் இங்கு இன்னும் ஓர் ஆச்சரியப் பகுதி இருப்பது யாருக்கும் தெரிவதில்லை ஆம், அது இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்மரப் பூங்கா.

கடந்த வாரம் நான் அப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட நினைவுகளை அனைவரின் பார்வைக்கும் கொண்டு வருகிறேன்

திருவக்கரை கிராமத்திற்குக் கிழக்கே சுமார் ஒரு கிமீ தொலைவில் ஓர் மேட்டு நிலப்பகுதிகளில் மல் பாறைகளுக்கிடையே கல்லாக மாறிய மரங்கள் காணப்படுகின்றன. இந்த படிவப் பாறைகள் கடலூர் மணற்கல் தொகுப்பைச் சேர்ந்தவை. சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியிலிருந்த காடுகளிலிருந்து ஆற்றில் டித்துக் கொண்டுவரப்பட்ட மரங்கள் மணலோடும் கூழாங் கற்களோடும் சேர்ந்து இங்கிருந்த நீர்நிலைகளில் படிந்தன. காலப்போக்கில் மேன்மேலும் மணற் படிவங்கள் அடுக்கடுக்காக படிந்ததால் ஏற்பட்ட வெப்ப அழுத்த மாற்றங்களால் இவை மரத்தின் தன்மையை இழந்து சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல்மரங்களாக மாறின. ஆயினும் காலவளையங்கள் கணுக்கள் போன்மரத்தின் தோற்றம் மாறாமல் அப்படியே காணப்படுகின்றன. இங்கு சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல்மரங்கள் உள்ளன. பெரும்பாலும் படுக்கை வாக்கில் கிடைக்கும். இந்த அடிமரங்களில் கிளைகளோ, வேர்களே. பட்டையோ காணப்படவில்லை. இதன்மூலம் இவை இப்போது உள்ள இடத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கல்மரங்களாக மாறியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
சில 30மீ நீளமும் 1.5மீ குறுக்களவு உடையவை. ஐரோப்பியாவைச் சேர்ந்த சொன்னேர்ட் எனும் ஐரோப்பிய அறிஞர் 1781ல் இந்த கல்மரங்களை பகுப்பாய்வு செய்துள்ளார். இவைகளில் சில திறந்த விதைத் தாவர இனத்தையும் சில மூடிய விதைத் தாவர இனத்தையும் சேர்ந்தவை. இக்காலத்தில் உள்ள புன்னை கட்டாஞ்சி, ஆமணக்குக் குடும்பங்களைச் சேர்ந்த மரங்களும் புளியமரத்தைப் போன்றவைகளும் இங்கே கல்மரங்களாக உள்ளன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். இந்த அரிய வகை கல்மரங்கள் பூமியின் வரலாற்றை உரைக்கும் சான்றுகளாகும். மிகவும் கவனமாகப் போற்றி பாதுகாக்கப்படவேண்டியன இவ்வகை கல்மரங்களாகும். நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரிய வகை தேசிய புவியியல் நினைவுச் சின்னங்களை பராமரித்து வரும் இந்திய புவியியல் ஆய்வுத்துரை 1957ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கல்மரங்களை போற்றிப் பாதுகாத்து வருகிறது.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக