திங்கள், 14 நவம்பர், 2022

லாலிபாப்போடு குழந்தைகள் நாள் விழா 2022........


     ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.11.2022) *குழந்தைகள் நாள் சிறப்பு உறுதி மொழி* ஏற்கப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள், பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களின் வழக்கமான செயல்பாடுகளான (தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, நலமுடன் வாழ 10 கட்டளைகள், திருக்குறள் விளக்கத்துடன், பொதுஅறிவு வினா - விடை, ஆங்கில பழமொழி தமிழ் பொருளுடன், செய்தித்தாள் வாசித்தல்) ஆகியன முடிந்த பின்னர் தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. 

        பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நாள் விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், பாடல், கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

        இதில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கத்தில் இருந்து சற்று  மாறுபட்டு குச்சி மிட்டாய் 🍭 (லாலிபாப்) வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் மிகுந்த மகிழ்வை வெளிப்படுத்தினர்....






































































திங்கள், 10 அக்டோபர், 2022

இரண்டாம் பருவம் இனிய பருவம்.......



    இன்று (10.10.2022)  2022-23 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத் தொடக்க நாள். 
பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாட நூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் இன்று பள்ளிக்கு வந்திருந்த 6 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், விலையில்லா பாடநூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன.

    1 முதல் 5 வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் எனும் 3 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை.  

    மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் இரண்டாம் பருவம் இனிய பருவமாக எல்லோருக்கும் அமைய வேண்டும் என வாழ்த்தினார்.

    நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், தற்காலிக ஆசிரியர் ம. யோகலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.