சனி, 9 ஜனவரி, 2021

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்

 

 

      

    கிருஷ்ணகிரி  மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.01.2021) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னதாக அனைவருக்கும்  கொரோனா கால சிறப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கும் வகையில் சுகாதார திரவம் மற்றும் முகக் கவசங்கள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.

பின்னர்  சமூக  இடைவெளி கடைபிடித்து அனைவருக்கும் இருக்கைகள் அமைத்துக் கொடுத்து பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் திரு செஇராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் தற்போதைய கொரோனா கால பள்ளியின்  செயல்பாடுகள்  மற்றும்  பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம் பற்றியும்  விரிவாக  எடுத்துக் கூறினார் 

 பின்னர்  உதவி ஆசிரியர்கள் திரு சி. ஆனந்தகோபாலகிருஷ்ண மூர்த்தி, திரு பூ. இராம்குமார் ஆகியோர் பயிற்சி முகாமுக்கான கருத்துக்களை வழங்கினர்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி குஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி உள்ளிட்ட  அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம். சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.....































சனி, 15 ஆகஸ்ட், 2020

மாணவர்கள் இல்லா சுதந்திர நாள் விழாக் கொடியேற்றம்.....




            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.08.2020, இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர நாள் கருத்துரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களால் மரக் கன்றுகள் மூலிகைச் செடிகள் நடப்பட்டது. நிகழ்வில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்

 











வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கொரோனாக் காலத்தில் பள்ளியில் தோட்ட வேலை மேற்கொண்ட ஆசிரியர்கள்......

 


கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்குச் செல்ல வேண்டியது இல்லை என்ற நிலை இருக்கும் போது, ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒருவார காலமாக மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.  தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம் சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தினமும் தமது சுய விருப்பத்துடனும், பள்ளியின் எதிர்காக வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பள்ளிக்குச் சென்று தமது பள்ளியில் புதிதாக பல்வகை மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம், அழகுச் செடிகள் தோட்டம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு எனப் பல்வேறு வகையான பள்ளிப் பணிகளை மாணவர்கள் உள்ளிட்ட எவரின் துணையும் இன்றி ஆசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வகை அழகிய தொட்டிகளில் செடிகளை வைத்தும், பள்ளி வளாகத்தில் உள்ள கடினமான நிலத்தைத் தோண்டி அதில் செடிகள் வைப்பது என பல்வேறு பணிகளை விருப்பத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில் ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் பள்ளி வளாகம் முழுமையும் இன்று சுத்தம் செய்தனர்.

இதை கண்ட பெற்றோர்களும், ஊர் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டதோடு இக்கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாகச் சேர்வதற்கும் இச் செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.