சனி, 14 ஜூலை, 2018

கல்வி வளர்ச்சி நாள் விழா - 2018




இன்று 14.07.2018 சனிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கர்ம வீரர் காமராசரின் 116வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.  இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நாள் விழா குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாளில் பிறந்த கர்ம வீரர் என்று அனைவராலும் போற்றப்படும் காமராசர் குறித்தும் விரிவாக விளக்கி இவ்விழா கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
 பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள் குறித்தும் காமராசர் குறித்தும் சிறப்பாக பேசியும், பாடல்களைப் பாடியும், கவிதைகளை வாசித்தும் விழாவை சிறப்பித்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் திறன்பேசி மூலம் Q.R. கோடை ஸ்கேன் செய்து அதிலுள்ள பயிற்சித் தாளை செய்து காட்டியமையும், எளிய வழியில் பெருக்கல் கணக்கையும், கண மூலம், வர்க்க மூலம் ஆகியவற்றையும் செய்து காட்டியமையும், 118 தனிமங்களையும் அவற்றின் குறியீட்டோடு கூறியமையும் பெற்றோர்களையும், விழாவில் பங்கேற்ற கல்வியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.
பின்னர் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்ட ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேசுவரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி, ஆசிரியப் பயிற்றுநர் திரு பா. சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் திருமதி கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் திருமதி பொ. அம்பிகா ஆகியோர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்திப் பேசினர்.
அதன் பின்னர் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி உதவி ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்திச் சென்றார்.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.
     விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் த. லதா, சத்துணவு மைய ஒருங்கிணைப்பாளர் பீமன் உள்ளிட்ட அதிக அளவிலான பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்





































































வெள்ளி, 13 ஜூலை, 2018

கல்வி உதவிப் பொருட்கள் வழங்கல்



இன்று 13.07.2018ல் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவிப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேறார்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் திரு கு. கணேசன் பள்ளி மாணவர்களுக்கு பாடக் குறிப்பேடுகளும், பரிசுப் பொருட்களும் வழங்கினார். 


























வியாழன், 28 ஜூன், 2018

முதல் பருவ விலையில்லா சீருடைகள் வழங்கும் விழா – 2018-19




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 28.06.2018 மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது .
                 பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா சீருடைகள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
                அப்போது அவர் இவ்வாண்டு தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணச் சீருடைகள் பற்றி எடுத்துக் கூறி 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு இளம்பச்சை நிற மேலாடைகள் மற்றும் கரும்பச்சை  நிற கீழாடைகள் வழங்கப்பட்டது. 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே வண்ண ஆடைகள் வழங்கப்பட்டது.  
           விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.லட்சுமி, . லதா, . திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்