செவ்வாய், 3 டிசம்பர், 2013

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா



இன்று (03.12.2013) ஊத்தங்கரை ஒன்றிய வள மையத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருவாளர் சி. சிவராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக ஆசிரியப் பயிற்றுநர் திரு சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருவாளர் இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் திருவாளர் கொ.மா. சீனிவாசன், ஜோதிநகர் ஊ.ஒ.ந.நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருவாளர் செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை அரசு பெண்கள் மேநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருவாளர் குப்புசாமி (மாற்றுத் திறனாளி) ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளி ஆசிரியர் திருவாளர் க. கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்போது மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்திடவே இது போன்ற விழாக்கள் நடத்தப்படுவதாகவும். இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் சமநிலை பெற்று உயர வேண்டும் எனவும் சமூகத்தில் இத்தகையவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்,
விழாவில் பங்கு பெற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் திரு குப்புசாமி அவர்கள் புல்லாங்குழல் மற்றும் மௌத்ஆர்கன் ஆகியன மூலம் பாடல்களைப் பாடி தமது திறமையைக் காட்டினார்.
பின்னர் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், அவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இதில் அவர்கள் மிகவும் ஆர்வத்தோடும், மிகிழ்வோடும் பங்கேற்றது காண்பவர் அனைவரையும் மகிழ்வடையச் செய்தது. பின்னர் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.













































புதன், 20 நவம்பர், 2013

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு


இன்று 19.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது
இன்று முன்னால் இந்திய பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அவர்களின் பிறந்த நாள் ஆகையால் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் முன்னால் இந்திய பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அவர்களின் தியாகம் நாட்டுப்பற்று, இந்திய மக்கள் முன்னேற்றத்தில் அவரின் பங்கு பணிகள்  பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.