வெள்ளி, 2 டிசம்பர், 2011

எமது பள்ளி

                                      

















சிறப்பு விருது


கணிணிக் கல்வியில் சிறப்பிடம் பெற்றமைக்கான விருது எமது பள்ளிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.சி.நா.மாகேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.விழாவில் அனைவருக்கும் கல்வித்திட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு க.பாஸ்கரன், மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு.எம். மூர்த்தி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கு பெற்றனர்.



செவ்வாய், 15 நவம்பர், 2011

குழந்தைகள் தினவிழா........

எமது பள்ளியில் இன்று 14.11.2011 ல் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் விழா குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது.
               விழாவிற்கு மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம், துணைத் தலைவர் திரி கே.எம்.எத்திராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு ஜெயராமன், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலர் திரு சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பாரத் ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்தரன் அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் . விழாவில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டது.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியை திருமதி சி. தாமரைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.



















கல்வி உரிமைநாள் விழா.........

               எமது பள்ளியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், இந்தியாவிற்கு தனியான ஒரு கல்விமுறை வேண்டும் என்று பாடுபட்டவருமான மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
                   அப்போது பள்ளித்தலைமை ஆசிரியரால் மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை, சேவைகள் மற்றும் இந்திய கல்வி முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டது.
                பின்னர் அன்னாரின் பிறந்தநாள் விழாத் தொடர்பாக இந்தியப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு கபில் சிபல், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அனுப்பி வைத்திட்ட கடிதங்கள் மாணவர்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.