சனி, 27 ஜூலை, 2024

பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள்....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சதுரங்கப் போட்டியின் விதிமுறைகளை அனைவருக்கும் விளக்கி போட்டியைத் துவக்கி வைத்தார். போட்டிகள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடைபெற்றது. அதில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் தா. யோகேஸ்வரன், சே. நித்திஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ம. பூஜா, சே. ஸ்ரீவர்த்தனி ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் ம. குரு, க. நவீன்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கோ. அகிலா, தா. தாரணி ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றனர். இவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் பள்ளி அளவிலான சதுரங்க போட்டி http://www.newstoday24x007.com/2024/07/blog-post_852.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக