புதன், 19 ஏப்ரல், 2023

மாணவர்கள் சேர்க்கை.....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (2023 - 24 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. முதல் நாளான இன்று, முதல் வகுப்பில் இரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், தற்காலிக ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, மு.அனிதா, பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் சங்கீதா உள்ளிட்டவர்களும், பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக