செவ்வாய், 7 ஜூலை, 2015

கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்டிகள்.........2015



இன்று 06.07.2015 திங்கட்கிழமை எமது கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை  மைய ஒருங்கிணைப்பாளரும், ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறியும், போட்டிக்கான விதிமுறைகளை  எடுத்துக்கூறியும் போட்டிகளைத் துவக்கி வைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட  மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

1 முதல் 5 வகுப்புப் பிரிவு :
                ஆண்கள்                     பெண்கள்
முதலிடம்       :     கே.சத்தியமூர்த்தி           வே. கலையரசி
                     சின்னகுன்னத்தூர்           ஜோதிநகர்
இரண்டாமிடம்   :     மா. இளவரசன்        எஸ். பிரியதர்ஷினி
                     ஜோதிநகர்                  நாப்பிராம்பட்டி

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :

முதலிடம்       :     நா. தினேஷ்          டி. இலக்கியா
                     ஜோதிநகர்                  நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்   :     பி. மோகன்           வே. சர்மிளா
                     கொண்டம்பட்டி             ஜோதிநகர்

அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கெங்கபிராம்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி அனுசுயா உள்ளிட்ட கெங்கபிராம்பட்டி மையத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக