சனி, 9 மார்ச், 2019

சர்வதேச மகளிர் தினவிழா – 2019




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று  (08.03.2019) சர்வதேச மகளிர் தினவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளித்  தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்  அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்கூறி  மகளிர்  தமக்கான உரிமை வேண்டி முதன் முதலில் பிரான்சில் குரல் கொடுத்ததையும், பின்னர் அது மாபெரும் கிளர்ச்சியாக ஆஸ்திரியா, டென்மார்க்,  இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியதையும் எடுத்துக் கூறி, 1848 மார்ச் 8 அன்று லூயிஸ் பிளங்க் அவர்களால்  பிரான்சின் புரூஸ்ஸிலியில்  அமைக்கப்பட்ட இரண்டாவது குடியரசில் முதன் முதலில் அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்கபட்டதையும், அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின்   வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,

மேலும் பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனக் கூறியதோடு அரசுப் பள்ளியில் அனைவரும் கற்க வேண்டும் எனக் கேட்டுகொண்டு அடுத்த கல்வி ஆண்டில் அதிக அளவிலான குழந்தைகள் நமது பள்ளியில் புதிதாக சேர்க்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

நிகழ்வில் துறிஞ்சிப்பட்டி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி கா.க. சாந்தி, ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் திருமதி இரா. வசந்தி, திருமதி மு. வித்தியா, திருமதி க. சாந்தி ஆகியோரும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி இரா. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கல்ந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் பெண் குழந்தைகள் மற்றும், பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கல்வி, பெண் உரிமை உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர் இதில் இரு மாணவிகள்  தமிழ் எழுத்துக்கள் 247ம் இடம் பெற்ற பாடலைச் சிறப்பாக பாடியது சிறப்புக்குறியது.

அடுத்து நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும், ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், அருகாமைபள்ளித் பெண் தலைமை ஆசிரியர் மற்றும்   பள்ளி கிராமத்தில் செயல்படும் 17 மகளிர் குழுத் தலைவர்களுக்கும், பள்ளி சமையலர் உள்ளிட்ட பெண் பணியாளர்கள் அனைவருக்கும் தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா, அங்கன்வாடிப் பணியாளர் திருமதி முருகம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் பள்ளி  உதவி ஆசிரியர் திருமதி நா.திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.
































































































தமிழ் மொழியின் 247 எழுத்துக்களையும் இசையோடு பாடும் எமது ஜோதிநகர் பள்ளி ம...

வியாழன், 28 பிப்ரவரி, 2019

தேசிய அறிவியல் நாள் விழா



இன்று 28.02.2019 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு குறித்து பல தகவல்களைக் கூறி அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இந்தியாவிலேயே முழுமையான கல்வியைப் பயின்று,  உலகின் மிக உயரிய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமன்,  அவர்களைப் போற்றும் வகையிலும் அவரின் சாதனைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும் இந்திய அரசு 1977 முதல் இந்த விழாவை கொண்டாடி வருவது குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பல்வேறு அறிவியல் சோதனைகளைச் செய்து காட்டினர். அறிவியல் வளர்ச்சியின் அவசியம் குறித்தும் பேசினர். 118 தனிமங்களின் பெயர்களை அவற்றின் குறியீட்டோடு குறிப்பிட்டு எட்டாம் வகுப்பு மாணவி ச. இனியா பார்க்காமல் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, ந. திலகா, பூ. இராம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது..
                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி ச, இனியா அனைவருக்கும் நன்றி கூறினார்.