செவ்வாய், 13 மார்ச், 2018

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்



             
ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறுவள மையம் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் கெங்கபிராம்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முன்னதாக காலை மைய ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய பயிற்சி முகாமில் கெங்கபிராம்பட்டி தலைமை ஆசிரியர் திருமதி மா. அனுசுயா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பயிற்சி முகாமில் மைய ஆசிரியப் பயிற்றுனர் திரு ப. சிவப்பிரகாசம் அவர்கள் பயிற்சி முகாமின் அவசியம் குறித்தும்,  பள்ளி மாணவர் சேர்க்கை குறித்தும் விவரித்தார், மைய ஒருங்கிணைப்பாளரும் ஜோதிநகர் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் பள்ளி வளர்ச்சியில் மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பங்கு மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் பற்றியும் அரசு பள்ளிகளைக் காக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பண்முக திறன் வளர் பயிற்சிகள் பற்றியும் விரிவாகக் கூறி பயிற்சி முகாமை நடத்தினார்.
முகாமில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ், ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி செ. வசந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டனர்.

மேலும் பயிற்சி முகாமில் ஜோதிநகர், கெங்கபிராம்பட்டி, கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, தாண்டியப்பனூர், அப்பிநாயக்கன்பட்டி, மண்ணாண்டியூர், உப்பாரப்பட்டி, பேயனூர், சந்தக்கொட்டாவூர், சின்னக்குண்ணத்தூர் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், அப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளிக்கு தலா 5 பேர் என மொத்தம் 72 பேர் கலந்துக்கொண்டனர்.


































சனி, 10 மார்ச், 2018

சர்வதேச மகளிர் தினவிழா - 2018

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (08.03.2018) சர்வதேச மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித்  தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறி மகளிர் தமக்கான உரிமை வேண்டி முதன் முதலில் பிரான்சில் குரல் கொடுத்ததையும், பின்னர் அது மாபெரும் கிளர்ச்சியாக ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியதையும் எடுத்துக்கூறி, 1848 மார்ச் 8 அன்று லூயிஸ் பிளங்க் அவர்களால்  பிரான்சின் புரூஸ்ஸிலியில்  அமைக்கப்பட்ட இரண்டாவது குடியரசில் முதன் முதலில் அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்கபட்டதையும், அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின்   வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,
பின்னர் பெண் குழந்தைகள் மற்றும், பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கல்வி, பெண் உரிமை உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய  விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர் இதில் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு பெற்றது சிறப்புக்குறியது.
அடுத்து நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி ச. இனியா அனைவருக்கும் நன்றி கூறினார்.