செவ்வாய், 3 அக்டோபர், 2017

பள்ளியில் சரஸ்வதி பூசை நாள்விழா....



இன்று 03.10.2017 செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி பூசை (விஜயதசமி) விழா கொண்டாடப்பட்டது.
 
முன்னதாக முதல் பருவ விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் வரவேற்பு அளித்து இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியில் தொடர்ந்து பள்ளியில் சரஸ்வதி பூசை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியில் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.

விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. இலதா, திருமதி ந. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 







புதன், 6 செப்டம்பர், 2017

ஆசிரியர் தினவிழா - 2017



இன்று 05.09.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தினவிழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினவிழாவாக கொண்டாதுவது பற்றி எடுத்துக் கூறி அவரின் வாழ்க்கை, தத்துவங்கள், நாட்டுக்கு அவர் செய்த கல்விச் சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து ஆசிரியர் தினம் தொடர்பாக  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் அனுப்பி இருந்த வாழ்த்துக் கடிதங்களையும் வாசித்துக் காட்டினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  ஆசிரியர் தினவிழா தொடர்பாக  எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற தலைப்பில் தமது ஆசிரியர்களை பற்றி கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின சிறப்பு பரிசுகள் பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி தமது அன்பை வெளிப்படுத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள், ந. திலகா, த. லதா  ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.