திங்கள், 15 ஆகஸ்ட், 2016

70 வது இந்திய சுதந்திர தின விழா.....




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.08.2016 இந்திய திருநாட்டின் 70 வது சுதந்திர தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காலையில் பள்ளியில் தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதன் பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 70வது சுத்தந்திர தின விழாவில் விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். 
தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் போராட்ட தியாகிகள் பற்றி விரிவாக விளக்கினார்.   விழாவின் போது மாணவர்கள் பாரதமாதா, மகாத்மா காந்தியடிகள், பண்டிட் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் போல வேடமிட்டு வந்து பார்வையாளர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினர். தொடர்ந்து சுதந்திர தினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு ஆர். சிவப்பிரகாசம் அவர்கள்  சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அடுத்து பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி, உதவி ஆசிரியர்கள் வே. வஜ்ஜிரவேல், ந. திலகா, த. லதா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. .
விழாவில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு சிவப்பிரகாசம் அவர்கள் ரூபாய் 1,000 /- பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி பள்ளியின் புரவலர் திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.


































































வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்.....






இன்று 10.08.2016.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.. பின்னர் தற்போதைய அரசு ஆணையின் படி பள்ளி கிராமக் கல்விக்குழு வங்கி கணக்கு  இனி பள்ளி மேலாண்மைக்குழுக் கணக்காக பெயர் மாற்ரம் செய்யப்படுவதோடு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகியோரால் கூட்டாக இயக்கப்படல் வேண்டும் என ஆணையிட்டுள்ளதால் தற்போதைய கணக்கு மாற்ரப்படல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 மேலும் தற்போது பள்ளி மேலாண்மை குழு தலைவராக உள்ள திருமதி பூ. கனகராணி அவர்களின் மகன் 8ம் வகுப்பு முடித்து இப்பள்ளியில் இருந்து சென்று விட்டமையால் அவர் தலைவர் பதவியை தானாகவே இழக்கிறார் எனவே அவருக்கு பதிலாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

      அதன்படி இன்று கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி இராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு கீழ்க்கண்ட புதிய பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு செய்யப்பட்டது,

1.   தலைவர்             :      கு. ஆனந்தி
2.   து. தலைவர்          :      மு. அம்பிகா
3.   நடத்துனர்/த.ஆ        :      செ. இராஜேந்திரன்
4.   ஆசிரிய உறுப்பினர்    :      மு. இலட்சுமி
பெற்றோர்கள்
5.   அ. பச்சையப்பன்
6.   வி. பெரியவேடி
7.   சே. மணிமேகலை
8.   சா. இராதா
9.   வே. இராஜகுமாரி
10.  பெ. பரமேஸ்வரி
11.  செ. செல்வி
12.  அ. சுகந்தி
13.  கோ. அமராவதி
14.  ச. சாந்தி
15.  சே. சகுந்தலா
16.  வே. கீதா
மக்கள் பிதிநிதிகள் :     
17.  டி. பூபதி
18.  வே. குமாரசாமி
19.  கல்வியாளர்          :      கு. பிரகாஷ்
20.  சுய உதவிக் குழு      :      செ. சித்ரா
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்