ஞாயிறு, 1 மே, 2016

2015 -16 கல்வியாண்டு நிறைவுநாள் விழா




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.04.2016) ”2015–16 கல்வியாண்டு நிறைவுநாள் விழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் கல்வியாண்டு நிறைவுநாள் தொடர்பான கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் கற்றல் என்பது ஓர் குறிப்பிட்ட காலம் மட்டும் நிகழக்கூடியது அல்ல எனவும், தனது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது எனவும் கூறி மனித குலத்திற்கு மிகவும் பயன் தரும் கல்வியை நாளும் நாம் தொடர வேண்டும் எனக்கூறி தெளிவாக விளக்கினார்.
பின்னர் மாணவர்கள் இப்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மூலம்.தாம் பெற்ற அனுபவங்கள் மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை உணர்ச்சிபூர்வமாக கூறினர்.
விழாவில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் எழுது பொருட்கள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, ந. திலகா த. லதா திரு வே, வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் எட்டாம் வகுப்பு மானவர் பூ. தமிழரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
















































வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாரதிதாசன் பிறந்தநாள் விழா.




இன்று 29.04.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பற்றி எடுத்துக் கூறி அவரின் கவிதை, கதை, பாடல்கள் எழுதும் ஆற்றல் பற்றியும், பாரதிதாசன் படைப்புகளில் காணும் புதுமை, புரட்சிகரமான விழிப்புணர்வுக் கருத்துக்கள் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  பாரதிதாசன் பிறந்தநாள் தொடர்பாக தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
   விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல்  ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.