தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான வினாடி-வினா போட்டி ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு ஓர் குழுவாகப் பங்கேற்றனர். அதில் எமது பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன், ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தனுஷ், ஆறாம் வகுப்பு மாணவி கு. ஜனனி ஆகியோர் கலந்துக்கொண்டு மூன்றாம் இடம் பெற்று சிறப்புச் சான்றிதழ் பெற்று வந்தனர். அவர்களுக்கு எமது பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வெள்ளி, 13 நவம்பர், 2015
புதன், 21 அக்டோபர், 2015
பள்ளியில் விஜயதசமி விழா.......
இன்று (21.10.2015) எமது பள்ளியில் கல்விக்கடவுள் என போற்றப்படும் சரஸ்வதி தேவிக்கான
சரஸ்வதி பூசையும், வெற்றிக் கொண்டாட்டமான
விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் ஆகியன தூய்மை செய்யப்பட்டன. பின்னர்
மாணவர்களுக்கான கற்றல்/கற்பித்தல் பொருட்கள் மற்றும் பாட நூல்களும் பள்ளி அலுவலகப்
பதிவேடுகள் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றதோடு மிக்க
மகிழ்வையும் வெளிப்படுத்தினர்.
வியாழன், 15 அக்டோபர், 2015
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
இன்று 15.10.2015
வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஏ.பி.ஜெ.
அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா “இளைஞர் எழுச்சி
நாளாக” கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம்
படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளித்
தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று
அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா
கொண்டாடப்படுவது குறித்தும், தமிழகத்தில் அது இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுவது
குறித்தும் விரிவாகப் பேசியதோடு அவர் தம் வாழ் நாள் முழுமையும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின்
முனேற்றத்திற்காகவே பயன்படுத்தியது குறித்தும்
விரிவாக பேசியதோடு அனைவரும் அப்துல்கலாமின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அப்துல்கலாம்
குறித்து எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் தமிழிலும், ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தனுஷ்
ஆங்கிலத்திலும் உரையாற்றினர், எட்டாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன் கவிதையையும், ஏழாம்
வகுப்பு மாணவி சு. அர்ச்சனா பாடலையும் வழங்கினர்.
முன்னதாக நடைபெற்ற
அப்துல்கலாம் நிழற்படம் வரையும் போட்டியில் எட்டாம் வகுப்பு மு.சுந்தர், மு. சுரேந்தர்,
த. பசுபதி, சி. சஞ்சய் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.
பின்னர் நிகழ்வில்
பங்கேற்ற மற்றும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி
ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)