சனி, 12 செப்டம்பர், 2015

சிறந்த ஆசிரியர்க்கான விருது......

            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் சார்பில் ”சிறந்த ஆசிரியர்க்கான விருது” வழங்கப்பட்டது.
               ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு க. அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பெரியார் பல்கலைக் கழகப் பதிவாளர் திரு ம. மணிவண்ணன், கல்விக் குழுமங்களின் நிறுவனர் திரு வே. சந்திரசேகரன்  ஆகியோர் சிறந்த ஆசிரியர்க்கான விருது மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
          விழாவில் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி முதல்வர் திரு சக்கரவர்த்தி, ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி செயலர் திரு கே. செங்கோடன், நிர்வாக அலுவலர் திரு க. செல்வராஜ், ஸ்ரீ வித்யா விகாஸ் பள்ளி தலைவர் திரு சீனிவாசன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி, அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு க.யுவராஜ் உள்ளிட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் சுமார் 450 பேர் கலந்துக்கொண்டனர்.



வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பாரதியார் நினைவு நாள்



இன்று 11.09.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் நினைவு நாள்  கடைபிடிக்கப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  பாரதியாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரதியார் நினைவு நாளை ஒட்டி அவரின் திருஉருவப் படத்திற்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. இலதா, திருமதி நா. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.










புதன், 9 செப்டம்பர், 2015

கண்காட்சியை பார்வையிடும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.......

           எங்கள் பள்ளி அறிவியல் கண்காட்சியை காண வந்த ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த மகேஸ்வரி அவர்கள் மற்றும் துரிஞ்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களும்........