வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஊத்தங்கரை கணினி நூலகம் - எமது பள்ளி மாணவர்களின் பார்வை........

                 எமது பள்ளி மாணவர்கள் 40 பேர் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள கணினி நூலகத்தை பார்வையிட்டனர்.
              ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணினி நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்நூலகம் முழுமையும் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் நிதி உதவியின்  மூலம் கட்டப்பட்டது. தமிழகத்திலேயே எந்த அரசு பள்ளியிலும் இல்லாத அளவிற்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கணினி நூலகம் இது. இங்கு அனைத்து போட்டித் தேர்வுக்கும் தேவையான விலை உயர்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.
                  மேலும் இணைய இணைப்புடன் கூடிய 30 கணினிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக உள்ளன. இந்த நூலகத்தை எமது மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தனர். 
                  பின்னர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

















வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஊத்தங்கரை புத்தகக் கண்காட்சியில் எமது பள்ளி மாணவர்கள்.......

             ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 40பேர் இன்று (13.08.2015) ஊத்தங்கரையில் நடைபெற்று வரும் வானவில் புத்தகக் களஞ்சியம் சார்பிலான புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
              பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் வந்த மாணவர்கள் முதல் முறையாக ஓர் புத்தகக் கண்காட்சியை பார்வயிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள் . முன்னதாக அவர்களுக்கு புத்தகக் கண்காட்சி பற்றியும் அதன் நோக்கம் பற்றியும், இங்கு இடம்பெற்றுள்ள நூல்கள் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. 
             பின்னர் புத்தகக் கண்காட்சியை முழுமையாகப் பார்வையிட்ட   மாணவர்கள் தமக்குத் தேவையான புத்தகங்களையும் அவர்களே தேர்வு செய்து விலைக்கும் வாங்கினார்கள். இவை இப்புத்தகக் கண்காட்சியின் நினைவாக பயன்படுத்துவோம் எனவும் தமது வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள பயன்படும் எனவும் மாணவர்கள் கூறினர்.


















செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

முப்பதாம் ஆண்டு துவக்கம்…..



ஊத்தங்கரை  ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 11.08.2015 பள்ளித் தலைமை ஆசிரியரின் 30ம் ஆண்டு பள்ளி கல்விப் பணி  துவக்க நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முதன் முதலாக 11.08.2015 அன்று, அன்றைய ஊத்தங்கரை ஒன்றியம் வடுகனூர் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தனது பள்ளி கல்விப் பணியைத் துவக்கி 29 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 30ஆம் ஆண்டு துவங்குவதை நினைவு கூறும் வகையில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  
பின்னர் பேசிய அவர் இந்த 30ம் ஆண்டில் கடந்த 29 ஆண்டுகள் செய்த பணியைக் காட்டிலும் கூடுதலான பணியை மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் முதல் கட்டமாக இந்த ஓராண்டில் (11.08.2015 முதல் 10.08.2016வரை) மட்டும் மாணவர்களின் திறனை மேம்படுத்திடவும் அவற்றை வெளிப்படுத்திடவுமான 30 சிறப்பு நிகழ்ச்சிகளை நமது பள்ளியில் நடத்திட விரும்புவதாகவும் அதற்கு அனைத்து உதவி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி அ. நர்மதா, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியரின் 30ம் ஆண்டு கல்விப் பணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரின் இவ்வாண்டுக்கான செயல் திட்டமான 30ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்திட முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் உறுதி அளித்தனர்.