வியாழன், 13 நவம்பர், 2014

நாளிதழ்களில் எமது பள்ளிச் செய்தி

12.11.2014 நாளிட்ட தினமணி நாளிதழ்

12.11.2014 நாளிட்ட மாலைமுரசு நாளிதழ் 

  1. 12.11.2014 நாளிட்ட  தமிழ்முரசு நாளிதழ்

செவ்வாய், 11 நவம்பர், 2014

கல்வி உரிமை நாள் விழா


        இன்று 11.11.2014 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் கல்வி உரிமை நாள்  விழா வாகக் கொண்டாடப்பட்டது.

      பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்  முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் கல்வி உரிமைநாள் விழாவின் அவசியம் மற்றும் இவ்விழா கொண்டாடப்படுவதன் காரணம் ஆகியவை குறித்தும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்திய கல்வி அமைச்சராகப் பணியாற்றி, இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை பற்றியும் விரிவாக பேசியதோடு அனைவரும் தரமான கல்வியை கற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
       பின்னர் மாணவர்கள் கல்வி உரிமைநாள் தொடர்பான பேச்சு, மற்றும் பாடல் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர் செல்வி த. லதா பெண்கல்வி குறித்து பேசினார்.
       இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
























திங்கள், 13 அக்டோபர், 2014

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ : www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
இன்று (13.10.2014) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடம் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தவும், அடுத்தவர்க்கு கொடுப்பதன் மூலம் தாம் மகிழ்ச்சி கொள்ளும் பண்பை வளர்த்திடவும் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது . அதன்படி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் இவ்விழாவின் நோக்கம் பற்றியும், அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து அவர் தமது உரையில்  அடுத்தவரிடமிருந்து நாம் பெறும்போது நாம் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறோம், ஆனால் நாம் அடுத்தவருக்கு கொடுப்பதன் மூலம் பெற்றவர் மகிழ்ச்சி அடைவதோடு அவருடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சி அடைகிறோம் இதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கிறது எனக் கூறினார்.
பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பள்ளியின் மூலம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மாணவர்கள் தாம் தயாரித்து கொண்டுவந்திருந்த கலைப் பொருட்களை தமக்கு பிடித்த நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு இரா. முரளி, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.