வியாழன், 9 அக்டோபர், 2014

சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு........

               இன்று (09.10.2014)  ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
            பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டும்,  பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி ”தூய்மையான பாரதம் - தூய்மையான பள்ளி” என்ற நோக்கத்தை நிறைவு செய்திடும் பொருட்டும் எமது பள்ளியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  இணைந்து ”சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி”யை ஏற்றனர்.









புதன், 8 அக்டோபர், 2014

பள்ளியில் சரஸ்வதி பூசை.........








இன்று எமது பள்ளியில் விஜயதசமி, சரஸ்வதி பூசை கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களால் பள்ளியின் வகுப்பறைகள், சுற்றுப்புறம் ஆகியன சுத்தம்செய்யப்பட்டது. அடுத்து அன்றாட கற்றல் / கற்பித்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தூய்மை செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பூசைக் கொண்டாட்டத்தில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்றனர்.      









செவ்வாய், 7 அக்டோபர், 2014

விலையில்லா பாட நூல்கள் வழங்கல்




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.10.2014) பள்ளி மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டது.
2014 – 2015 ம் ஆண்டுக்கான இரண்டாம் பருவ விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் மு. இலட்சுமி, இரா. முரளி, வே. வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.














திங்கள், 8 செப்டம்பர், 2014

முப்பெரும் விழா



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 08.09.2014 ல் உலக எழுத்தறிவு தினவிழா, ஆசிரியர் தின விழா, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
     ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊத்தங்கரை ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு கா. நேரு, சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். ஆசிரியப் பயிற்றுனர்கள் திருமதி இரா. வசந்தி, திரு இரா. இராஜா, திரு சி. சிவலிங்கம் மற்றும் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர் திரு கு. கணேசன்,  பள்ளி உதவி ஆசிரியர்கள் வே வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.   
விழாவில் பேசிய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் சீரிய கற்பித்தல் பணி, நிர்வாகத் திறமை. அனைவரிடமும் பழகும் விதம் மற்றும் மற்றவர்களுக்காக உதவும் பண்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசினர்.
பின்னர் தமது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின பரிசுகளை வழங்கிய பின் ஏற்புரை வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ .இராஜேந்திரன் அவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விருதை தமது உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பனம் செய்வதாகக் கூறினார்.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு இரா. முரளி அனைவரூகும் நன்றி கூறினார்.