ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

எமது பள்ளியில் - அறிவியல் கண்காட்சி



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 21.08.2014 பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
        முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், கண்காட்சியை ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் முழுமையாக பார்த்து, ஓர் தனிப் பள்ளி இவ்வளவு கூடுதலான படைப்புகளை காட்சிப்படுத்தி இருப்பதற்கு  மகிழ்ச்சி அடைவதாகக் கூறி தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  
           கண்காட்சி நிகழ்வில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர் கு. கணேசன் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
      கண்காட்சியை ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. இர. பிரசாத், கெங்கபிராம்பட்டி, கணக்கம்பட்டி, கொண்டம்பட்டி, துரிஞ்சிப்பட்டி, உள்ளிட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரும் வந்து பார்வையிட்டனர்,
       கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு இரா. முரளி, திரு, வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் சிறப்பாக செய்தனர்.



புதன், 20 ஆகஸ்ட், 2014

தொற்றா நோய்கள் விழிப்புணர்வு போட்டிகள்



இன்று எமது ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஒன்றிய வளமைய அளவிலான தொற்றா நோய்கள் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றது.
 அதில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி, விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டி, ஓவியம் வரையும் போட்டி, சுவரொட்டி வரையும் வரையும் போட்டி என நான்கு விதமான போட்டிகள் நடைபெற்றது அதில் ஒன்றியம் முழுமையும் இருந்து 38 பள்ளிகள் சார்பில் 170 குழந்தைகள் பங்கேற்றனர்.
அதில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்கள் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு குறித்த தமது கருத்தோவியங்களை பல்வேறு வடிவங்களில் வெளியிட்டனர்.